ஞாயிறு, அக்டோபர் 30, 2011

.


يُرِيدُونَ أَن يُطْفِؤُواْ نُورَ اللّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللّهُ إِلاَّ أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். 9:32


யார் தீவிரவாதிகள் என்று அவர்களுடைய வரலாற்றைப் புரட்டினால் அவர்களுக்கேத் தெரியும்.


அறியாமை எனும் காரிருளில் சிக்கித் தவித்துக் கரை சேர முடியாமல் தத்தளித்துக் கிடந்த மனித சமுதாயம் முழுமைக்கும் அருட்கொடையாக திருக்குர்ஆன் எனும் ஒளியை ஏந்தி வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களை  தீவிரவாதியைப் போல் சித்தரித்து சித்திரம் வரைந்து  மதவெறி தாகத்தை தனித்துக் கொண்டது டென்மார்க் பத்திரிக்கை நிருவனம் ஒன்று.

யார் தீவிரவாதிகள் என்று அவர்களுடைய வரலாற்றைப் புரட்டினால் அவ்களுக்கேத் தெரியும். 

இஸ்லாம் ஆரம்ப கால கட்டத்தில் அவர்களுடைய மக்களை மௌட்டீகத்திலிருந்தும்> மடமையிலிருந்தும் வென்றெடுத்தது. 

அதனால் முஸ்லிம்களை ஒழித்தொழித்துக் கட்டி உலகம் முழுவதையும் கிறித்தவத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சிலுவைப் போரைத் தொடங்கினார்கள் ஓரளவு முஸ்லீம்களை கொன்றொழித்தார்கள் ஆனால் இஸ்லாத்திடம் தோல்வியை தழுவினார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் இறைவனால் உயர்த்தப் பட்டப் பின் அவர்கள் கொண்டு வந்த வேதத்தை தங்களது மனோ இச்சைக்காகவும்> சரீர சுகத்திற்காகவும் மிருகத்தை விடக் கீழான வாழ்க்கை வாழ்வதற்காகவும் தங்களது மனம்போனப் போக்கில் மாற்றிஎழுதினார்கள்.

ஆதமின் சந்ததிகள் அனைவருடைய பாவங்களையும் சிலுவையின் மூலம் இயேசு சுமந்து கொண்டார் என்றுக்கூறி மொத்த கிறித்தவ சமுதாயத்தையும் பாவிகளாக்கினார்கள். 

கடலோரங்களில் இறைவனின் அற்புதப் படைப்பை ரசித்து அவனுக்கு நினைவு கூற வேண்டிய மனித சமுதாயம் தங்களை மிருகமே கண்டு வெட்கி தலைகுனியும் அளவுக்கு மதிமயங்கிக் கிடந்தார்கள், அவர்களுடைய பாவங்களை தோளில் சுமந்து கொண்டதாகக் கூறிய இயேசு கிறிஸது அவர்களை கைவிட்டு விட்டார். 

உலக இரட்சகனாகிய ஓறிரைவன் அல்லாஹ் தனது கட்டளையை கடலுக்கனுப்பி ஓலைப்பாயில் சுருட்டுவது போல் ஒரே வீச்சில் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்கடியில் சொருகி விட்டான்.

ஒவ்வாருக் காலகட்டத்திலும் வெவ்;வேறு வடிவில் இஸ்லாத்தை சீண்டுவதே அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது

பல நேரங்களில் முஸ்லீம் பெயர் தாங்கிகளைக் கொண்டு சீண்டுவார்கள். சில நேரங்களில் தாங்களே இஸ்லாத்திற்கு நன்மை செய்கிறோம் பேர்வழிகள் போல் களமிறங்குவார்கள் அதன் வெளிப்பாடே முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சிலை வைக்க முற்பட்டது.

சிலை வணக்கத்திற்கு உலகிலேயே முதன் முறையாக சாவு மணி அடித்தது இஸ்லாம் மட்டுமே என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் அதனால் அது நிறைவேறாமல் போகலாம் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனாலும் ஒரு வேலை அது ஒர்க்அவுட் ஆகி விட்டால் அதன் மூலம் அவர்களிடம் சிலை வணக்கத்தைப் புகுத்தி இஸ்லாத்தை சீர்குலைக்கலாம் என்றெண்ணி  அதை செய்ய முனைந்தார்கள்> அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அதை கை விட்டவர்கள் டென்மார்க் பத்திரிக்கை நிருவனத்தின் மூலம் சத்தியத் தூதர்(ஸல்) அவர்களை தீவிரவாதியாக கேலிச்சித்திரம் வரைய வாசகர்களைக் கொண்டு ஏற்பாடு செய்தனர்.

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத தெரிவித்தும் அதை பத்திரிக்கை சுதந்திரம் என்றுக் கூறிவிட்டார்கள்>  

அவர்கள் கடவுள்கள் என்று ஏற்றுக் கொண்ட மூவரையும் கேலிச்சித்தரம் வரைய எங்களையும் அனுமதிக்க வேண்டியது தானே என்று பல இஸ்லாமியரும் கேட்டுக் கொண்டதற்கு அறவே பதில் இல்லை.

இன்று உலகில் வல்லரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் தங்களது வல்லமையை இஸ்லாமிய நாட்டு பொருள் வளத்திலிருந்தே வளர்த்துக் கொண்டார்கள். இஸ்லாமிய அரபு நாடுகளில் வனிகம் என்கிற பெயரில் பெருக்கிக் (சுருட்டிக்) கொண்டார்கள்.
  
இவ்வாறு நம்மிடமிருந்து சுரண்டிக் கொண்டு நம்மையே மடையர்களாக நினைப்பகார்களேயானால் நாமும் நம்மாலான சக்திக்கு தகுந்தவாறு எதையாவது செய்தேயாக வேண்டும். அதுவும் மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும் 

அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் தடுக்கட்டும்> அதற்கு இயலாவிட்டால் தமது நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் தடுக்கட்டும். அதுவே ஈமானில் பலவீனமான நிலையாகும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்

மேற்கானும் நபிமொழி தீமையைக் கானும் பொழுது மூன்று நிலைகளில் எதிர்க்குமாறுக் கூறுகிறது> ஒன்று கையால் தடுப்பது>; (கையால் தடுக்கும் அளவு இன்று நாம் சக்தி பெற்றிருக்க வில்லை) இரண்டாவது நிலை வாயால் தடுக்க வேண்டும் (மேற்படியார்களின் அடக்குமுறைகளை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்ய முடியாத அளவு சில நாடுகளில் குரல்வலைகள் நெறிக்கப் பட்டுள்ளதால் அதுவும்; முடியாத நிலையாகி விட்டது) மூன்றாவது நிலைபாடு என்ன மாதிரியான நிலையிலும் முஸ்லீம்களுக்கு சாத்தியமானதேயாகும்

உங்களில் எவரும் தன்னுடைய தந்தை> தன்னுடைய மகன் மற்றும் உலக மக்கள் அனைவரை விடவும் நான் அவருக்கு அதிக விருப்பமானவனாக ஆகும் வரை முஃமினாக முடியாது. என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதார நூல்: புகாரி>முஸ்லீம்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை 13 வருடகாலம் செய்தார்கள் அப்பொழுது குறைஷி வம்சத்து இறைநிராகரிப்போர் நபிகளார் மீதும்> இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லீம்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை மெற்கொண்டனர்> ஆனாலும் அவர்கள் குறைஷிகளை எதிர்த்து தாக்கவில்லை> இனியும் இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து வரும் எனும் நிலை வந்தப் பின் நாடு நாடு துறந்து வேறொரு நாட்டுக்கு அகதிகளாய் தஞ்சம் புகுந்தார்கள் அங்கும் அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் அவர்கள் மீது யுத்தம் தொடுப்பதற்காக மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்கள் இதன் பின்னரே அவர்களை எதிர்த்துப் போரிடுவது என முஸ்லீம்கள் முடிவு செய்தனர்.

13 வருடங்கள் பிறந்த நாட்டில் கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் எதிர்த்து வாளேந்த வில்லை. 

காருண்யமிக்க சாந்த நபிகள் 
யுத்தங்கள் செய்வதையம் அதன் மூலம் உயிர்கள் கொல்லப்படுவதையும் சாந்த நபியவர்கள் விரும்பியதில்லை என்பதற்கு மேற்காணும் நாடு துறந்தும் தங்களை நாடோடிகளாக்கிய குறைஷிகள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்யாமல் அமைதி காத்தத் தன்மை சான்றுப் பகர்கிறது.

மனித உயிர்களின் மீது மட்டுமல்லாமல் பிற ஜீவராசிகளின் உயிர்கள் மீதும் இறக்கமும், கருணையும் கொண்டவர்களே காருண்ய நபியவர்கள்.

ஒரு முறை தம் தோழர்களுடன் பயணத்திலிருக்கும் போது தம் இயற்கைத் தேவையை நிறைவேற்றிட சென்று விட்டபோது  தோழர்கள்  குருவி ஒன்று அதன் இரு குஞ்சுகளுடன் கொஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டவர்கள் குஞ்சுகளை மட்டும் பிடித்துக் கொள்கிறர்கள். திடுக்குற்ற அந்த குருவி நிம்மதியிழந்து தன் இறக்கைகளை விரித்து, தாழ்த்தி பறந்து வந்து தன் இயலாமையை வெளிப்படுத்திற்று. அச்சமயத்தில் அங்கு வருகை தந்த காருண்ய நபியவர்கள்  ''இதன் குஞ்சுகளை பறித்து இக்குருவியின் நிம்மதியைக் குலைத்தவர் யார்? அவற்றை அதனிடமே ஒப்படைத்து விடுங்கள்'' என்றுக் கடிந்து கொள்கிறார்கள் . அறிவிப்பவர்: அப்துல்லாஹிப்னு மஸ்¥த் நூல்: அபூதா¥து

ஒருமுறை நபித் தோழர்கள் எறும்புப் புற்று ஒன்றை எரித்து விடுகிறார்கள். இதனைப் பார்த்த நபியவர்கள் ''நெருப்பை படைத்தவனாகிய அல்லாஹ்வை தவிர வேறு யாரும் எந்த உயிரையும் நெருப்பினால் வேதனை தருவது கூடாத செயலாகும்'' என்று தமது தோழர்களை கண்டித்தார்கள். 

சின்னச்சிறு ஜீவராசிகளின் விஷயத்திலும் கூட தங்களுடைய கருனையை முடிந்த மட்டும் பொழிந்திருக்கிறார்கள் காருன்ய நபியவர்கள் என்றால் மனித உயிர்களின் மீது எவ்வாறு பரிவுடன் நடந்திருப்பார்கள் என்பதை அறிவாளிகள் புரிந்து கொள்வார்கள்.

ஒரு ஈ> எறும்பைக கொல்வதைக் கூட தடை செய்திருந்த சாந்தமே உருவான நமது உயிரிலும் மேலான அன்னலெம் பெருமானார் (ஸல்) அவர்களை ஒரு தீவிரவாதியாக கேலிச்சித்திரம் வரைந்த கயவர்களின் நாட்டுத் தயாரிப்புகளை உள்ளத்தால் இன்று முதல் நம்மிடமிருந்து ஒதுக்கி விடுவோம் என்று உறுதி கொள்வோமாக !

தீவிரவாதிகள் என்று யாரும் தாமாக உருவாவதில்லை> மாறாக தீவிரவாதிகள் உருவாக்கப் படுகிறார்கள் என்பதற்கு பலசான்றுகள் இருந்தாலும் இப்பொழுது அவர்களாக நபிகளாரை கேலிச்சித்திரம் வரைந்து முஸ்லீம்களை சீண்டியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்

இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் ''நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை'' என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள். 30 : 58

இவ்வாறே அறியாதவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான். 30:59.

பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியாக நம்பாதோர் உம்மை இலேசாகக் கருதிட வேண்டாம். 30:60.

எம்மால் முடிந்தளவு அவர்கள் நாட்டுத்  தயாரிப்புகளை படத்துடன் தந்திருக்கிறோம்> இதைக் கானும் ஒவ்வொருவரும் பிற மொழிப் பேசும் முஸ்லிம்களுக்கும் இயன்ற வரை மொழி பெயர்த்துக் கூறி தடை செய்ய முயற்சி செய்யுங்கள்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்